Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கும்பகோணம்: கும்பகோணத்தில் தூய அலங்கார அன்னை பேராலயத்தில்கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான இயேசு பாலன் பிறந்த நாளான இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடப்பட்டு வருகின்றது. நேற்றிரவு இரவு 10 மணி முதல் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு கிறிஸ்துவ மக்கள் புத்தாடை அணிந்து குடும்பத்துடன் தேவாலயத்திற்கு வந்தனர்.
அங்கு சிறப்பு திருப்பலி உலக நன்மைக்காக நடத்தப்பட்டது கிறிஸ்மஸ் குடில் அமைக்கப்பட்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது அதனைத் தொடர்ந்து இயேசு பிறப்பு தத்ரூபமாக நடத்திக் காண்பிக்கப்பட்டது இதில் ஆயர் அந்தோணிசாமி பங்கு தந்தைகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினார்கள். பின்னர் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.